நடத்தையில் சந்தேகம்... அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை... தற்கொலைக்கு முயன்ற கணவன்.!

நடத்தையில் சந்தேகம்... அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை... தற்கொலைக்கு முயன்ற கணவன்.!



husband-who-murder-his-wife-brutally-who-attempts-suici

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் 34 வயதான இவர் நித்திய காமாட்சி என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆகி 8 வருடங்களுக்கு பிறகு மனைவியின் நடத்தையில் பால்ராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

Pudhukottaiஇதனால் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில்  ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தை தலையணையால் அழுத்தி உள்ளார். அப்போது மயக்கம் அடைந்த அவரது தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

Pudhukottaiபின்னர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இவர்களது வீட்டில் ஏற்பட்ட அலறல் சத்தத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய பால்ராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்த அவரது மனைவி நித்ய காமாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.