நீ மட்டும் அரசு மருத்துவரா? நீ வேலைக்கு போக வேண்டாம்.. கொடுமை செய்த கணவன் மீது வழக்கு..!

நீ மட்டும் அரசு மருத்துவரா? நீ வேலைக்கு போக வேண்டாம்.. கொடுமை செய்த கணவன் மீது வழக்கு..!


husband-tourcherd-his-wife-who-is-govt-doctor

டாக்டர் மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காந்தி புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமரன் (27)  சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மவுலியா (26) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். 

காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டே அரசு மருத்துவமனை பணிக்கு செல்வதற்காக படித்து வந்தனர்.

இந்நிலையில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுலியா மத்திய அரசு மருத்துவர் பணிக்கு தேர்வானார். சந்தோஷ் குமரன் தேர்வாகவில்லை.

இதனால் கோபமடைந்த சந்தோஷ் குமரன் தனது மனைவி மவுலியாவை அரசு மருத்துவர் பணிக்கு செல்லக்கூடாது என்று கூறி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக அவரது மனைவி மவுலியா சந்தோஷ் குமரன் மீது புகார் அளித்துள்ளார்.

அதன் பெயரில் கொலை மிரட்டல் ஜாதி பெயரை கூறி திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சந்தோஷ் குமரன் அவரது நண்பர் கணேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.