மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.! புதுக்கோட்டையில் சோக சம்பவம்.!

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.! புதுக்கோட்டையில் சோக சம்பவம்.!



husband suicide in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன். இவருக்கும், வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவி ராதா கோபித்து கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழமுடியாத இளமுருகன் மனைவி ராதாவை சேர்ந்து வாழ்வதற்காக அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த இளமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  இளமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.