ரொம்ப சவாலாக இருந்தது.! ஆனாலும்.. ஸ்வீட்டான தருணங்களை பகிர்ந்த நடிகை தமன்னா!!
மனைவியை கடலில் தள்ளி கழுத்தை அழுத்தி கொலை செய்த கணவர்... பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
மனைவியை கடலில் தள்ளி கழுத்தை அழுத்தி கொலை செய்த கணவர்... பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் - கார்த்திகா தம்பதியினர். இந்நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை பகுதியில் குடும்பத்தினருடன் கடலில் குளிக்க சென்றுள்ளார் ராமநாதன். அப்போது மனைவி கடலில் குளித்து கொண்டிருந்த போது அலையில் சிக்கி உயிரிழந்ததாக ராமநாதன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரின் வார்த்தையில் சந்தேகமடைந்த போலீசார் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கடலுக்கு அழைத்து சென்று தண்ணீரில் தள்ளி கழுத்தை அழுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி சுய உதவிக் குழுக்களில் கார்த்திகா அதிக அளவில் கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தாததால், மகளிர் குழுவினர் வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டதால் கோபத்தில் ராமநாதன் கார்த்திகாவை கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அதனையடுத்து போலீசார் தலைமறைவான ராமநாதனை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.