2வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்.!

2வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்.!



Husband killed wife in palakad

பாலக்காடு சித்தூர் பகுதியை சேர்ந்த உதயனின் மனைவி ஊர்மிளா. இவர் உதயனிடமிருந்து விவாகரத்து பெற்று சஜீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் கோழி கடைகளில் உள்ள கழிவுகளை வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

Palakad

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர்மிளா இரண்டாவது கணவரையும் பிரிந்த நிலையில் தனது தாயாரின் வீட்டில் தங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சஜீஷ், மனைவி ஊர்மிளாவை போன் மூலமாக மிரட்டி வந்துள்ளார்.

இதில் கணவரின் போனை எடுக்காததால் கடந்த மே மாதம் ஊர்மிளாவின் வீட்டிற்கு சென்ற சஜீஷ் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர்மிளா கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்து கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Palakad

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஊர்மிளா தனது தாயார் வீட்டில் வேலைக்கு சென்ற போது, சஜீஷ் ஊர்மிளாவின் தலையில் சுத்தியால் அடித்துக் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஒரு நிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சஜீஷை கைது செய்துள்ளனர்.