51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 28 வயது இளைஞன்! அதன் பின் நடந்த பயங்கரம்.!
51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 28 வயது இளைஞன்! அதன் பின் நடந்த பயங்கரம்.!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி. ஐவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது என கூறப்படுகிறது.
இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் - மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமாரி தனது கணவர் அருணிடம் கூறியுள்ளார்.
இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோபமடைந்த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்தார்.
ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருந்ததால் அருணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் ஒப்புக்கொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவியதாலும், வயது வித்தியாசம், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையாலும் தனது மனைவி ஷஹாகுமாரியை கொன்றதாக அருண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் அருணை கைது செய்தனர்.