என்னால் சித்திரவதை தாங்க முடியல! யாராவது வாங்க! கதறி அழுத நடிகையின் காணொளி வைரல்! பார்த்து பதறும் ரசிகர்கள்...



tanushree-dutta-cries-harassment-video

 பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தனது வீட்டு அருகிலுள்ளவர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் எனக் கூறி கண்ணீருடன் கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. இதில் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாராட்டைப் பெற்றார்.

இவர், தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துள்ளார். இவரது “ஆஷிக் பனாயா” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி! விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்! என்ன நடந்தது! தல அஜித்தின் நிலை என்ன? வெளியான வீடியோ இதோ...

2018ம் ஆண்டு, நடிகர் நானா படேகர் மீது மீ டூ குற்றச்சாட்டு சுட்டிக்காட்டி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தற்போது, தனுஷ்ரீ தத்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “என் வீட்டில் வேலைக்கூட நிம்மதியாக நடக்கவில்லை. சிலர் என்னை தொடர்ச்சியாக தவறாக நடத்துகிறார்கள். யாராவது தயவுசெய்து உதவுங்கள்…” என துயரமாக அழுதபட கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, மீண்டும் ஒருமுறை தனுஷ்ரீ தத்தாவின் வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: ஆகாஷ் உடன் கள்ளக்காதலா? இனியாவின் தவறான முடிவால் ரித்திஷின் நிலையை பாருங்க! மரண பயத்தில் இனியா.. பாக்கியலட்சுமி புரோமோ...