அதிர்ச்சி தகவல்! தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து ஆனந்த் சீனிவாசன் என்ன இப்படி சொல்லிட்டாரே....!!!
சர்வதேச அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் கூட இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக உலகளாவிய பதற்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் நிலையில், இந்திய சந்தையில் நிகழும் இந்த விலை சரிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணத் தட்டுப்பாடே முக்கிய காரணம்
இந்த நிலை குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளிக்கையில், சந்தையில் நிலவும் கடும் Cash Crunch தான் தங்கம் விலை குறைவதற்கான முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கம் விலை குறைவாக இருப்பதற்கு மக்களிடம் ரொக்கப் பணம் இல்லாததே அடிப்படை காரணம் எனவும் அவர் கூறினார்.
சந்தையில் பணப்புழக்கம் குறைவு
தற்போது சந்தையில் தங்கம் கிடைக்காமல் இல்லை. ஆனால் அதை வாங்குவதற்கான பணப்புழக்கம் குறைந்துள்ளதால் விலை தற்காலிகமாக சரிந்துள்ளதாக அவர் விளக்கினார். இதனால் ஒரு கிராம் தங்கம் சந்தை அறிவிப்பை விட 300 முதல் 400 ரூபாய் வரை குறைவாக விற்பனையாகும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: காலை, மாலை 2 முறையும் சரிவு..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்த தங்கம் விலை..!!! மகிழ்ச்சியில் மக்கள்....!!!
வெள்ளி முதலீட்டில் எச்சரிக்கை
இதற்கிடையே வெள்ளி விலையும் வீழ்ச்சியடைந்து வருவதை சுட்டிக்காட்டிய ஆனந்த் சீனிவாசன், மக்கள் வெள்ளியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். கையில் வெள்ளி வைத்திருப்பவர்கள் தற்போதைய சூழலில் அதை விற்று வெளியேறுவது நல்ல முடிவாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் தாக்கம்
இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் போன்ற உலக அரசியல் சூழல்கள் தங்கத்தின் எதிர்கால விலையை பாதிக்கக்கூடும் என அவர் கூறினார். குறிப்பாக துபாய் போன்ற பெரிய சந்தைகளில் இருந்து தங்கம் வரும் முக்கிய கடல் வழியான ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டால், உலக சந்தையில் தங்கத்திற்கு கடும் பற்றாக்குறை உருவாகலாம்.
ரூபாய் மதிப்பு சரிவு
மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 92 ரூபாயைத் தாண்டி சரிந்து வருவது கவலைக்குரியதாகும். பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் தற்போதைக்கு அதிக நம்பிக்கை தரும் நிலையில் இல்லாததால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் பார்க்கும்போது, தற்போதைய தங்கம் விலை சரிவு நீண்ட கால மாற்றமல்ல. சர்வதேச அரசியல் மாற்றங்கள், போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் தங்கம் மீண்டும் வேகமாக உயரக்கூடும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு.
இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்.....ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,120 குறைந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!!