கறி சமைக்காததால் மனைவியை வெட்டிய மதுபோதை கணவன்!

கறி சமைக்காததால் மனைவியை வெட்டிய மதுபோதை கணவன்!



husband-attack-wife-in-erode-for-not-cooking-mutton

ஈரோடு அருகே மட்டன் சமைக்காததால் கணவன், மனைவியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு சாரதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மது பழக்கத்திற்கு அடிமையான கருப்பசாமி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

mutton

அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த கருப்பசாமி ஆட்டுக்கறி ஏன் சமைக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கருப்பசாமி தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த அவரது மகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனிடையே இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

mutton

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தலைமறைவாக இருந்த கருப்பசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.