மக்களே உஷார்.. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை.. 16 மாவட்டங்களில் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

மக்களே உஷார்.. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை.. 16 மாவட்டங்களில் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!



heavy-rain-alert-for-5-districts-in-tamilnadu

தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6-ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, தேனி, திருப்பூர் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Rain alert

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அத்துடன் அதிகபட்ச வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 6-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.