பாலியல் அத்துமீறல்., பாம்பு கடித்து இறந்த சிறுமி.. இறப்பதற்கு முன் சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

பாலியல் அத்துமீறல்., பாம்பு கடித்து இறந்த சிறுமி.. இறப்பதற்கு முன் சிறுமிக்கு நடந்த கொடூரம்..!



girl-dead-after-sexual-harassment

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியை, இறப்பதற்கு முன் காமுகன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை தாய் பிரிந்த நிலையில், தந்தையும் உயிரிழந்தார். இதன் பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எருமைவெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் வளர்ந்து வந்தார்.

தற்போது சிறுமிக்கு 8 வயதாகும் நிலையில், அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி வயல்வெளிக்கு சென்ற சிறுமியை பாம்பு கடித்ததால், அவர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதனால் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிறுமியிடம் முதியவன் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.

இந்த வீடியோவை கண்ட சிறுமியின் வளர்ப்புதாய் உடனடியாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், விசாரணை செய்த காவல்துறையினர் எருமைவெட்டிபாளையம் பாலு என்ற 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

harassment

இந்த முதியவரின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி அவர் பாலியல் தொந்தரவளித்ததை வீட்டில் சொல்வதை தவிர்த்துள்ளார். அதை சாதகமாக கொண்டு முதியவன் ஒருநாள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் முதியவன் ஈடுபட்ட போது, அதனை தடுக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சதீஷ், விஜயகுமார், ரமேஷ், கண்ணன், பாஸ்கர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாம்பு கடித்து சிறுமி இறந்ததால் யாருக்கும் தெரியாது என எண்ணி சமூக வலைத்தளத்தில் பாலியல் அத்துமீறல் வீடியோவை வெளியிட்ட ஐவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.