அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.! பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்வு.!

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.! பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்வு.!


Gas cylinder price increased

கடந்த நான்கரை மாதங்களுக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும் என்று பேசப்பட்டது. இந்தநிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை போன்று பல மாதங்களுக்கு பின் சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.