பெண்களை மனைவியாக 15 நாட்கள் வாடகைக்கு விடும் நாடு எது தெரியுமா? என்ன காரணம் தெரியுமா?

இந்தோனேசியாவில் காணப்படும் விசித்திரமான திருமண வழக்கம்
உலகில் பல நாடுகளுக்கும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் விசித்திரமானவை. இந்தோனேசியா போன்ற நாடுகளில் வினோதமான திருமண நடைமுறைகள் காணப்படுகின்றன.
15 நாட்கள் மனைவியாக வாழும் பெண்கள்
இந்தோனேசியாவின் புன்காக் பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள், பணக்கார சுற்றுலா பயணிகளுடன் தற்காலிகமாக 15 நாட்களுக்கு மனைவியாக வாழுகின்றனர். இந்த முறையில் பெண்கள் அந்த ஆண்களுடன் குடும்ப வாழ்க்கையை போன்று உடன்பாடு செய்துவிடுகிறார்கள்.
பொருளாதார அழுத்தம் மற்றும் குடும்ப பிழைப்பு
இந்நிலையில், பெண்கள் தங்கள் குடும்பங்களை பிழைப்புக்கு கொண்டு செல்ல மற்றும் ஏழ்மை தவிர்க்கும் ஒரு வழியாகவே இந்த தற்காலிக திருமணங்களை ஏற்கின்றனர். இது முழுமையாக இரு தரப்பினரின் சம்மதத்தோடு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ வேண்டுமா..? அப்போ இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...
திருமணத்தின் விதிமுறைகள்
இந்த திருமணங்கள் அங்கீகரிக்கப்படாதவை, ஆனால் ஏஜென்சிகள் மூலம் திட்டமிட்டு நடைபெறுகின்றன. ஒரு பெண் விரும்பினால் ஒரே வருடத்தில் 20-25 திருமணங்களில் பங்கேற்கலாம். இந்த திருமணம் முடிவடையும் போது, மீண்டும் புதிதாக திருமணம் செய்வதற்கும் தடையில்லை.
இது சுற்றுலாப் பயணத்துக்கான விதியாக மாறியுள்ளது
இந்த இன்பத்திருமணம் என்றழைக்கப்படும் நடைமுறை, அந்த நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்காற்றும் வகையில் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு செல்லும் போதே, இந்த திருமணமும் முடிவடைகிறது.
இதையும் படிங்க: இந்த காரணங்களால் தான் தலைமுடி நிறைய கொட்டுதாம்! இனி தெரிஞ்சு கவனிச்சுக்கோங்க...