கஞ்சா குடிக்கிகள் தொல்லையால் கடைக்கு பூட்டு போட்ட வியாபாரி.. போஸ்டரால் பரபரப்பான அரக்கோணம்.!



Ganja drinkers are a nuisance in Arakkonam

ரௌடிகள் போர்வையில் கூட்டாக சேர்ந்து கொண்டு கஞ்சா போதையில் இளைஞர்கள் செய்யும் செயல்கள் எல்லையை மீறுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், தக்கோலம் பகுதியில் சிமெண்ட், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளராக தூத்துக்குடியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் இருந்துள்ளார். 

மார்ச் 11ம் தேதி அவரின் கடைக்கு முன்பு கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம் புகார் அளித்த தகவல் தெரிந்து, மறுநாள் கற்கள் வீச்சு, தராசு உடைப்பு சம்பவம் நடந்துள்ளது. 

Latest news

மேற்படி சம்பவம் குறித்து புகார் அளித்தபோது, காவல் துறையினர் வழக்குபதியாமல் அனுப்பியுள்ளனர். அன்றைய நாளில் கடைக்கு வந்த கஞ்சா குடிக்கிகள், கடையை திறந்தால் ஒழித்துவிடுவோம் என எச்சரித்துள்ளனர். இதனால் பதறிப்போன முத்துராமலிங்கம் கடையை மூடினார்.

கடைக்கு முன்பு கஞ்சா போதை ரவுடிகளின் அட்டகாசத்தால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது என எழுதி வைத்து இருந்தார். இந்த விஷயம் தொடபிராக வியாபாரிகளின் சங்கத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது. காவல் துறையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் முத்துராமலிங்கம் இன்று கடையை திறந்தார்.