பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை... முன்விரோதம் காரணமா.? தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர விசாரணை.!

பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை... முன்விரோதம் காரணமா.? தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர விசாரணை.!



gangster-was-brutally-murdered-by-a-gang-police-forms-a

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் எபனேசர். 25 வயதான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் நேற்று இரவு காட்டூர் கூட்ரோடு வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இவரது ஆட்டோவை இடித்து தள்ளியது.

tamilnaduஇதனைத் தொடர்ந்து ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த எபனேசர் காரில் இருந்து தப்பி ஓடி இருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் அவர் மீது  நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெட்டி படுகொலை  செய்துவிட்டு வந்த காரிலேயே தப்பி சென்றது.

tamilnaduஇச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்ட எபநேசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படையமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.