கள்ளக்காதலுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய மனைவி.. தீர்த்துக்கட்டிய கணவன்..!

கள்ளக்காதலுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய மனைவி.. தீர்த்துக்கட்டிய கணவன்..!



flirting-with-adulterous-love-the-wife-caught-in-the-ac

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் வசித்து வருபவர்கள் பாண்டி செல்வம் - ரூபா தம்பதியினர். ரூபா அங்குள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பட்டாசு ஆலையில் சாத்தூர் படந்தாளை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரூபாவிற்கும் கருப்புசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரூபாவின் கணவர் பாண்டி செல்வம் தனது தாயாரை சந்திப்பதற்காக வெளியூர் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரூபா தனது கள்ளக்காதலனை இரவு வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

Adulterous love

இதனையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பிய பாண்டி செல்வம் தனது மனைவி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து கட்டையால் கருப்பசாமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கருப்புசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளியான பாண்டி செல்வத்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.