காதல் தோல்வி எதிரொலி... காதலியின் கழுத்தை அறுத்த காதலன்.. ஈரோடு அருகே பயங்கரம்..!

காதல் தோல்வி எதிரொலி... காதலியின் கழுத்தை அறுத்த காதலன்.. ஈரோடு அருகே பயங்கரம்..!



echoes-of-love-failure-lover-who-cut-his-girlfriends-ne

ஈரோடு அருகே ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கதறவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளம்பெண் ஆட்டோவில் சென்ற போது அவரது கழுத்தை பிளேடால் அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞரை ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் குன்னூரை சேர்ந்த ராகிலா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

love failure
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகிலாவின் கழுத்தை அறுத்த இளைஞர் அவரது உறவினரான ஜீவா என்பது  தெரியவந்துள்ளது. மேலும் இவர் ராகிலாவை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக ராகிலா பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா பிளேடை கொண்டு ராகிலாவின் கழுத்தை அறுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஜீவா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.