கையில் கத்தி!! இரத்தம் சொட்ட சொட்ட நின்னாரு!! என்னனு விசாரித்தபோது தெரிந்த அதிர்ச்சி உண்மை..

கையில் கத்தி!! இரத்தம் சொட்ட சொட்ட நின்னாரு!! என்னனு விசாரித்தபோது தெரிந்த அதிர்ச்சி உண்மை..


dmk-should-win-man-cut-his-own-finger

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் கூலித்தொழிலாளி ஒருவர் கைவிரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தேர்தலை முன்னிட்டு தமிழகமே பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு கூலித்தொழிலாளி ஒருவர் கைவிரலை வெட்டி சாமிக்கு காணிக்கையாக படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி குருவைய்யா (66). தனது சிறுவயது முதலே திமுக கட்சி மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்துவந்துள்ளார். ஆனால் கடைசி இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக தோல்வி அடைந்தததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் குருவைய்யா. இதானால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்று ஆண்டுதோறும் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.

தற்போது தமிழகத்தில்  6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்நிலையில், இந்தமுறை எப்படியாவது திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்ட குருவைய்யா, நேற்று அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று, தனது கைவிரலை வெட்டி சாமிக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார்.

கையில் கத்தி, எங்கும் இரத்தத்துடன் இருந்த இவரை பார்த்த அங்கிருந்த மக்கள், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருக்கன்குடி காவல்துறையினர் குருவைய்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.