பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி..! அந்த பெண் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்துச்சு..! பகீர் வாக்குமூலம்..!

பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி..! அந்த பெண் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்துச்சு..! பகீர் வாக்குமூலம்..!



Dindigul government office lip lock scene video

எல்லாம் அந்த பெண் சம்மதத்தோடுதான் நடந்ததாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி அரசு அலுவலகத்தில், பட்டப்பகலில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் தனக்கு இனிப்பு கொடுக்க வந்த பெண்ணிற்கு ஊழியர் ஒருவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதனை அடுத்து கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்ததாகவும், தன்னை பிடிக்காத சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனனர் எனவும் கோபிநாத் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னதான் அந்த பெண் சம்மதம் தெரிவித்திருந்தாலும் அரசு அலுவலகத்தில் இவ்வாறு நடந்துகொண்டதிற்காக கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.