விருப்பமில்லாத திருமணத்தால் விரக்தி; மணமான 4 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை..!

விருப்பமில்லாத திருமணத்தால் விரக்தி; மணமான 4 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை..!



Dindigul College Girl Died after marriage Within 4 Days Ends Life 

 

மகளின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு, திருமணமான 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக கலங்காத்துயரை அடையாளமாக கொண்டு சென்ற மகளின் சோக முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நொச்சியோடைபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகள் பிரியா (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கம்பத்தில் ஓர்க்சாப் வைத்து நடத்தி வருகிறார். பிப்ரவரி 11ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில், பிரியாவுக்கு விருப்பம் இல்லாமல், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மறுவீடு அழைக்க செவ்வாய்க்கிழமை புதுமணத்தம்பதிகள் திண்டுக்கல் வருகை தந்துள்ளனர். 

Dindigul

செவ்வாய் இரவில் தம்பதிகள் தனித்தனியே உறங்கிய நிலையில், புதன்கிழமை காலை பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் எழுந்தபோது கமலக்கண்ணன் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்துபோனார். 

பின் இதுகுறித்து சாணார்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. திருமணமாகி 4 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறுகிறது.