என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
சிறுமியின் முன்பு சுயஇன்பம்: விந்தணுவை தெளித்த இளைஞர்; கூட்ட நெரிசலைப்பயன்படுத்தி தாயின் முன் பகீர் காரியம்.!
சிறுமியின் முன்பு சுயஇன்பம்: விந்தணுவை தெளித்த இளைஞர்; கூட்ட நெரிசலைப்பயன்படுத்தி தாயின் முன் பகீர் காரியம்.!
டெல்லி மெட்ரோவில் சிகப்பு பாதை (Red Line) வழித்தடம் ரிதலா நகரில் இருந்து ஷாஹீத் சீதல் வரை 34 கி.மீ தூரத்தை இணைகிறது. இந்த 34 கி.மீ தூரத்தில் 29 இரயில் நிலையங்கள் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ரக்சா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை மெட்ரோ இரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.
இந்நிலையில், இரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சிறுமியின் முன்பு தனது ஆணுறுப்பை வெளியே எடுத்து சுயஇன்பம் செய்து, தனது விந்தணுவை சிறுமியின் மீதே பாய்ச்சி இருக்கிறார். இதனை அதிர்ச்சியுடன் கண்டு பதறிப்போன சிறுமியின் தாய், சீலாம்பூர் இரயில் நிலையத்தில் மெட்ரோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்பொருட்டு, இரயில் பெட்டியில் இருந்தவாறு உதவி கோரி சமிக்கை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சீலாம்பூர் இரயில் நிலையத்தில் தயாராக இருந்த மெட்ரோ அதிகாரிகளிடம் குற்றவாளி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சர்ச்சை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.