ஓமத்தண்ணீர் விற்பனை செய்து வந்த பெண்மணி பரிதாப பலி; கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சோகம்.!

ஓமத்தண்ணீர் விற்பனை செய்து வந்த பெண்மணி பரிதாப பலி; கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சோகம்.!



Cuddalore Bhuvanagiri Women Died Accident 

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பின்னலூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரின் மனைவி தமிழரசி (வயது 53). இவர் ஓமத்தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று வடலூர் மாதா கோவில் பகுதியில் ஓமத்தண்ணீர் விற்பனை செய்துவிட்டு, மீண்டும் வடலூர் சாலையில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 

Cuddalore

அந்த சமயத்தில் அவ்வழியே வந்த கார் மோதி தமிழரசி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பழனிடன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.