கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா! விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு!

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா! விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு!



Corona in vilupuram

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலத்தில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.  இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

corona
அதேபோல் கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த தொழிலாளர்களில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்றவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.  இதனால், விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.