எனது வீட்டிற்கு வா உனது சான்றிதழை தருகிறேன்... கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பயிற்சியாளர்!!

எனது வீட்டிற்கு வா உனது சான்றிதழை தருகிறேன்... கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பயிற்சியாளர்!!



college-girl-trying-to-raped-by-sports-coach-in-kanchip

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இதில் வாலிபால், கூடை பந்து, ஹாக்கி, தடகள விளையாட்டுக்கள் போன்ற பல விளையாட்டுகளுக்கான பயிற்சி மைதானங்கள் இந்த விளையாட்டு அரங்கத்தில் உள்ளன.இதில் தினமும் பயிற்சியாளர்கள் வந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாலாஜா பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் விஷ்ணு காஞ்சி என்ற பயிற்சியாளரிடம் இக்கு ஸ்குவாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று பயிற்சி முடிந்து தனக்குத் தரவேண்டிய சான்றிதழை குறித்து பயிற்சியாளரிடம் அந்த மாணவி கேட்டுள்ளார். அதற்கு விஷ்ணுகாஞ்சி மைதானத்திற்கு பக்கத்தில் தான் தனது வீடு இருக்கிறது. அங்கு வந்து உனது சான்றிதழை வாங்கிக் கொள் என்று கூறியுள்ளார். 

kanchipuram

இதனை நம்பி மாணவியும் பயிற்சியாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மாணவியை விஷ்ணு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து அந்த மாணவி தப்பி ஓடி நடந்த சம்பவம் குறித்து வெளியே இருந்த பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விஷ்ணு காஞ்சியை கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.