நண்பர்களுடன் டாஸ்மாக் பாரில் சரக்கு, சிகிரெட் அடித்த இளம்பெண்; வீடியோ லீக்.! ஆடிப்போன சமூக ஆர்வலர்கள்.!

நண்பர்களுடன் டாஸ்மாக் பாரில் சரக்கு, சிகிரெட் அடித்த இளம்பெண்; வீடியோ லீக்.! ஆடிப்போன சமூக ஆர்வலர்கள்.!



Coimbatore Young Girl Drinks Liquor at tasmac Bar

மதுபானம் அருந்துவது என்பது இன்றளவில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருக்கும் மிகவும் பிடித்த கேடான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. இந்த உடலுக்கு கேடான விஷயத்தை பெண்களும் எடுத்துக்கொள்வது, அவர்களின் உடலநலத்தை கேள்விக்குறியாக்குகிறது. 

உண்ணும் உணவு, உடுத்தும் உடை என அவரவர் விருப்பப்படி வாழுவதற்கு உரிமை உண்டு என்றாலும், உடலுக்கு கேடானதை தவிர்ப்பது நல்லது என்பதே சிறந்த முடிவு.

கோவையில் ஒரு கல்லூரி மாணவி அங்குள்ள டாஸ்மாக் பாரில் தனது ஆண் நண்பருடன் சரக்கு அடித்து விட்டு புகை பிடிக்கும்காட்சி....

இது தான் திருட்டு திராவிட மாடல் சாதனை 😡😡😡😡😡😡

Posted by Thala Thalapathi S Durai on Tuesday, 20 June 2023

இந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் மதுபான கடையில், இளம்பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு புகை பிடிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

விடீயோவின் பின்னணி விபரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. விடீயோவின்படி, பெண்போல சிகை அலங்காரம் கொண்ட ஆண் மது அருந்துகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விபரங்கள் உறுதி செய்யப்படவில்லை.

மேற்படி இந்த வீடியோ கடந்த 2018-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், தற்போது இணையத்தில் மீண்டும் வெளியாகி வைரலாகியதால் சமூக ஆர்வலர்கள் கோபமடைந்துள்ளனர். அத்துடன் நல்ல விஷயங்களை பகிர மாட்டீர்கள். இதுபோன்ற நாட்டிற்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை மட்டும் நன்கு பகிருங்கள் என காரசாரமாக தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.