அப்பா தோல்வியடைந்ததால் விரக்தி.. பூத் சிலிப்பை கிழித்தெறிந்து மகள் ஆவேசம்.!
அப்பா தோல்வியடைந்ததால் விரக்தி.. பூத் சிலிப்பை கிழித்தெறிந்து மகள் ஆவேசம்.!
தந்தையின் தோல்வியை மனதளவில் எதிர்கொள்ள இயலாத மகள், பூத் சிலிப்பை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் உள்ளாட்சியிலும் திமுக ஆட்சியை உதிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர் பேரூராட்சியின் 13 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் மணி என்பவர் போட்டியிட்டார். இவர் தோல்வியடைந்த நிலையில், அவரின் மகள் பூத் சிலிப்பை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
தந்தை தோல்வியான விரக்தியில் மகள் செய்த ஆர்ப்பாட்டம் குறித்த தகவல் காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பெண்மணியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அமைதிப்படுத்தினர்.