கரூரில் உயிரிழந்தவர்கள் முதல் தற்போதைய அரசியல் வரை புட்டு புட்டு வைத்த முதல்வர் விஜய்! அதிரும் அரசியல் களம்..!!!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும் கட்சித் தலைவருமான விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தனது உரையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் முதல் தற்போதைய அரசியல் சூழல் வரை பல்வேறு விவகாரங்களை அவர் விரிவாகப் பேசினார்.
கரூர் உயிரிழப்புகளை நினைவுகூர்ந்த விஜய்
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரப் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கரூருக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த நிகழ்வு தனது வாழ்நாளின் மிகப்பெரிய வலியாகவே இருக்கும் என்றும், காவல்துறை நினைத்திருந்தால் அன்றைய கூட்டத்தை நிறுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார். திட்டமிட்டு பழி முழுவதையும் தவெக மீது சுமத்த முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவிப்பு
மக்களின் உயிரை பணயம் வைத்து அரசியல் செய்யும் தலைவர் தாம் அல்ல என்றும், தனக்குப் பணத்தை விட மக்கள் முக்கியம் என்றும் விஜய் தெரிவித்தார். கரூரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், அந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், தவெக அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் முகமூடிகள் தற்போது கிழிந்து வருவதாகவும் விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம்
தொடர்ந்து பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். மக்கள் அமைத்த அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைப்பதாக கூறிய அவர், 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் அந்த விவகாரத்தை எழுப்பியபோது எதிர்க்கட்சிகள் பதிலளிக்காமல் தவிர்த்ததாகவும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரிய முதல்வர்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த விஜய், அதே நம்பிக்கையுடன் வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்தால் நல்லாட்சியும் வளர்ச்சியும் உறுதியாகும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: BREAKING: கரூர் கூட்ட நெரிசலில் இழந்த 41 பேரின் குடும்பகளுக்கும் அரசு பணி.! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு.!!!