புதிய ஆட்சியா.... இல்ல புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சியா? மற்றும் சிலர் கட்சி வீட்டுக்கு போன புதிய சோபா பின்னால் போன புதிய முதல்வர் விஜய்! என்ன நடக்குது இங்க? உதயநிதியின் அதிரடி பேச்சு!!!



udhayanidhi-stalin-attack-on-tvk-government-confidence-

தமிழக வெற்றிக் கழக அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் வாக்கு சதவீதம் முதல் ஆட்சியின் செயல்பாடு வரை பல்வேறு விஷயங்களை முன்வைத்து அவர் தாக்குதல் நடத்தியது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், மக்கள் தீர்ப்பை ஆளுங்கட்சி தவறாக விளக்கிக் கொள்கிறது என குற்றம்சாட்டினார். மொத்தம் பதிவான 4.93 கோடி வாக்குகளில், ஆளுங்கட்சி வெறும் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள மக்கள் தங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளதாகவும் கூறினார்.

“65 சதவீத மக்கள் நிராகரித்த ஆட்சி”

“ஏறத்தாழ 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் எதிர்ப்பு குரலும் எழுந்தது.

இதையும் படிங்க: சர்ச்சை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த விஜய்! என் மீது விழும் சர்ச்சையை நேருக்கு நேர் மோத தயார் !!!

அதிமுக பிளவு குறித்து விமர்சனம்

அதன்பின், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சூழலையும் அவர் குறிப்பிட்டார். “அதிமுக பிளவுபட்ட பிறகு ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதன் பிறகுதான் பெரிய திருப்பம் நடந்தது” என்று கூறிய அவர், மறைமுகமாக அரசியல் உடன்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது, அதன் பின்னாலேயே புதிய முதலமைச்சரும் செல்கிறார்” என்று கிண்டலாக பேசியது பேரவையில் சிரிப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

‘புஷ்பா’ பட பாணி ஆட்சி என விமர்சனம்

தனது உரையின் இறுதியில், “மொத்தத்தில் சினிமா பாணியில், குறிப்பாக ‘புஷ்பா’ பட பாணியில் இந்த தமிழக வெற்றிக் கழக அரசு நடைபெற்று வருகிறது” என்று அவர் விமர்சித்தார். தற்போது ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த பேச்சு சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

 

இதையும் படிங்க: அரசியல் நையாண்டி! எடப்பாடி இனி கெட்ட வார்த்தையில் தான் பேசுவார் போல... ஓய்வு எடுக்க சொல்லியும் மைக்கை பிடித்து கலாய்த்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்!!!