BREAKING: இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்! பின்னணியில் இருக்கும் பரபரப்பு காரணம்..!!!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தற்போது சட்டரீதியான தடை இல்லை. இருப்பினும், மாநிலத்தில் காலியாக உள்ள பிற தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் உடனடியாக தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து சந்தேகம் நீடிக்கிறது.
ஐந்து தொகுதிகளுக்கு தொடரும் நீதிமன்றத் தடை
தகவலின்படி, தமிழகத்தில் காலியாக உள்ள மற்ற ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு தற்போதைய சூழலில் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... முதல்வர் விஜய் முறைப்படி ராஜினாமா செய்தார்! அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல்..!!!
வழக்குகள் முடிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் முடிவடைந்த பிறகே இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் தடை நீங்கினால், காலியாக உள்ள மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுக காட்டும் அசூர வேகம்! இந்த வாய்ப்பை விட்டா அவ்வளவு தான்... எடப்பாடி கையில் இருக்கும் 'அணு ஆயுத' அரசியல் வியூகம்.!!!