திருப்பூரில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.! பெரும் சோகம்!!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் இன்று லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர மோதலில் இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேருக்கு நேர் மோதிய லாரி - கார்
தகவலின்படி, ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியும் காரும் எதிரெதிரே வந்தபோது பலத்த மோதல் ஏற்பட்டது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், காரில் பயணம் செய்தவர்களில் ஆறு பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: BREAKING: கோவில் தரிசனம் முடித்துவிட்டு திருப்பிய குடும்பத்தில் கார் விபத்து! 4 பேர் பரிதாப பலி... குழந்தைகள் கவலைக்கிடம்! பெரும் சோகம் !!!
ஒருவருக்கு தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
போலீசார் தீவிர விசாரணை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து சென்று மீட்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்து எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள் மீது கார் மோதி உயிரிழப்பு! கதறிதுடிக்கும் பெற்றோர்கள்...!!!!