#RainAlert: இன்று முதல் 18 ஆம் தேதி வரை எங்கெங்கு மழை? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#RainAlert: இன்று முதல் 18 ஆம் தேதி வரை எங்கெங்கு மழை? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!


Chennai RMC Weather Update Today

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

16 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 செல்சியசும் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் தமிழக கேரள கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.