ச்சீ.. நீ எல்லாம் மனுசனா.. கரும்பு காட்டில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் நண்பரான 12ம் வகுப்பு மாணவருடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த பரசுரெட்டி பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரான மணி என்பவர் அவர்கள் இருவரையும் விசாரிப்பது போல் நைசாக பேசி கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவனை கரும்பால் அடித்து விரட்டிவிட்டு மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சிறுமி என்றும் பாராமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரான மணியை போக்சோவில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.