சீன கப்பலில் சென்னை வந்திறங்கிய பூனை! பீதியடைந்த மக்கள்!

சீன கப்பலில் சென்னை வந்திறங்கிய பூனை! பீதியடைந்த மக்கள்!


cat arrives chennai from Chinese ship


சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை வந்திருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் உயிருள்ள பூனை ஒன்று கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் வந்திறங்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சீன கப்பலில் உயிருள்ள பூனை வந்ததால் பீதி ஏற்பட்டது.

Cat

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இந்த நிலையில் சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த பூனைக்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.