சென்னையில் ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞர் மரணம்.. போலீசார் விசாரணை.!



Boy slippd in train death parangimalai

சென்னை பரங்கிமலை அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். 21 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன பழுது நீக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

Parangimalai Railway station

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது ரயில் கிண்டியில் இருந்து பரங்கிமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு அருகே நின்றிருந்த மோகன் குமார் திடீரென ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

Parangimalai Railway station

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் மோகன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மாம்பலம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.