காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம்! ஆனால் ஜோதிடர் கணிப்பில் உன் வாழ்க்கை விவாகரத்துல தான் முடியும்! 9 நாள் பரிகார பூஜை....இறுதியில் காதலியின் விபரீத முடிவு!!!
பெங்களூருவில் திருமணக் கனவுகளுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவரின் உயிரிழப்பு, சமூகத்தையே சிந்திக்க வைத்துள்ளது. காதலும் குடும்ப சம்மதமும் இருந்தபோதிலும், ஒரு ஜோதிடர் கணிப்பு காரணமாக வாழ்க்கையை முடித்துக் கொண்ட வித்யாஜோதியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணத்திற்கு ஜோதிடர் தடை
27 வயதான வித்யாஜோதி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் மணவாழ்க்கை கசக்கும் என்றும், அது நிச்சயம் விவாகரத்தில் முடியும் என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
9 நாட்கள் பரிகார பூஜை – மன உளைச்சல் அதிகரிப்பு
ஜோதிடரின் வார்த்தைகளை உண்மையாக நம்பிய வித்யாஜோதி, அந்தத் தடையை நீக்க 9 நாட்கள் கடுமையான பரிகார பூஜைகளை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரிகாரத்தின் இறுதி நாள் பூஜை முடிந்தவுடன், தனது அறைக்குள் சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: பள்ளி பருவத்தில் இருந்து காதல்! வீட்டில் திடீரென ஏற்பாடு செய்த திருமணம்! லவ் டார்ச்சலால் காதலை கைவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
குடும்பத்தினருக்கும் காதலனுக்கும் அதிர்ச்சி
திருமணத் திட்டங்களில் உற்சாகமாக இருந்த குடும்பத்தினரும், எதிர்கால கனவுகளுடன் இருந்த காதலனும், வித்யாஜோதியின் இந்த திடீர் முடிவால் நிலைகுலைந்து போயுள்ளனர். வித்யாஜோதி தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கணிப்பை நம்பி வாழ்க்கையை முடிக்க வேண்டிய நிலை உருவானது பல கேள்விகளை எழுப்புகிறது. இச்சம்பவம் சமூகத்தில் ஜாதகம், நம்பிக்கை மற்றும் மனநிலை ஆதரவு பற்றிய விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வறுமையால் பிரிந்த காதல் தம்பதிகள்! கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்! பரபரப்பு சம்பவம் !!!