மேலும் ஒரு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!

மேலும் ஒரு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!


Another student hangs herself: A heartwarming letter is caught

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியிலுள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் ஒரு விவசாய தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.

தனது மகளின் கல்லூரி கட்டணம் ரூ 12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தியுள்ளார். அவர் விவசாய கூலி என்பதால் குடும்ப செலவுகளை பற்றாக்குறையுடன் பராமரித்துள்ளார். ஆனாலும் தனது மகளுடைய படிப்பு தடைபட்டுவிடக் கூடாது  என்பதற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

தனது கல்லூரி கட்டணத்தை பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா  வேதனை அடைந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டு கதவை உள்புறமாக பூட்டிய பாப்பா தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய பாப்பாவின் பெற்றோர் வீட்டினுள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துக்குமரன், கள்ளக்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட  காவல்துறையினர்அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்கள் சிரமப்படுவதால் மன வருத்தத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கல்லூரி மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.