தண்டவாளத்தில் படுத்து உயிரை விட்ட பெண்: ரயில்வே போலீசாரின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

தண்டவாளத்தில் படுத்து உயிரை விட்ட பெண்: ரயில்வே போலீசாரின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!



A woman lying on the rails has committed suicide

சிதம்பரம் அருகேயுள்ள வேளக்குடி பகுதியில் தண்டவாளத்தில் படுத்து பெண் ஒருவர் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உளள குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ். இவருடைய மனைவி ராதிகா(வயது 32). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் சிதம்பரம் வேளக்குடி ரெயில்வே கேட் அருகே, ராதிகா தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதாக தெரிகிறது. அப்போது மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் என்ஜின், ராதிகா மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராதிகா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக்வும், பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அலைந்தும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனம் உடைந்த ராதிகா, நேற்று முன்தினம் வெங்காயத்தலமேடு கிராமத்தில் உள்ள தந்தை மதியழகன் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வேளக்குடி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது ரயில்வே காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்தூறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.