ஆடையை விலக்கி அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி: அலறி துடித்த கணவன்..!

ஆடையை விலக்கி அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி: அலறி துடித்த கணவன்..!



A wife who removed clothes and poured boiling hot water on private parts

ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(32). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா(30.) இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த பிரியா கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார். இதன் காரணமாக தம்பதியினருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவருக்கு சரியான பாடம் புகட்ட நினைத்த பிரியா கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு அவரது ஆணுறுப்பில் ஊற்றினார்.

கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் உடல் வெந்த தங்கராஜ் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாணாவரம் காவல்துறையினர், பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.