மாணவி சரளா தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் : கீழச்சேரியில் தொற்றிய பரபரப்பு..!

மாணவி சரளா தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் : கீழச்சேரியில் தொற்றிய பரபரப்பு..!



a-sudden-twist-in-the-case-of-student-saralas-suicide

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம் - முருகத்தாள் தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் சரளா என்ற மகள் உள்ளார். சரளா திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சி உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சரளா அதே பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் சரளா பள்ளிக்கு செல்ல தயாராகி சக நண்பர்களுடன் பேசி சிரித்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நண்பர்கள் உணவு அருந்த சென்றுவிட்ட நிலையில் சரளா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் மரண செய்தியை கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளிக்கு முன்பு போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல்துறையினர் திருத்தணி - கீழச்சேரி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவி சரளா விஷ பூச்சுக்கடியால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறப்படுகிறடு. இது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் மாணவி மரணம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதிகளவில் கீழச்சேரி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.