7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்.!



  70 Year Old Man abused 7 Year Old Girl 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள கிராமத்தில், 70 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில், அவரின் அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 

அவரது அண்ணன் மகனுக்கு திருமணம் முடிந்து மனைவி, 7 வயது மகள் இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சிறுமி வீட்டின் வெளியே தனியாக விளையாடிக்கொண்டு இருந்தார். 

Child abuse

பாலியல் தொல்லை

அப்போது, அங்கு சென்ற நபர், சிறுமியிடம் விளையாடுவதுபோல் பாலியல் சீண்டல் செய்துள்ளார். வீட்டிற்குள் வந்த சிறுமி, நடந்ததை கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!

இதனால் மகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை புரிந்துகொண்ட சிறுமியின் தாய், சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல்துறையினர் முதியவரை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!