சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி பயங்கர விபத்து.. துள்ளத்துடிக்க மூவர் பலி.! 



3 Tourists Killed in Tragic Car Crash with Parked Gas Tanker on Way to Ooty

நெசவுத்தொழிலாளி குடும்பத்துடன் சுற்றுலா வந்தபோது நேர்ந்த துயரம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நெசவுத்தொழிலாளி: 

Tiruppur Accident News: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, குதிரட்டிப்பட்டி, புச்சிரெட்டிபள்ளி பகுதியில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர் நெசவுத்தொழிலாளி ஆவார். இவரின் மனைவி தேன்மொழி. தம்பதிகளுக்கு சுபஸ்ரீ என்ற 6 வயதுடைய மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

குடும்பத்துடன் சுற்றுலா: 

விஜயின் சகோதரர் குமார் (வயது 36), உறவினர்கள் காவியா, இலக்கியா. இவர்கள் உட்பட 8 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு திருத்தணியில் இருந்து காரில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை நேரத்தில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி, சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர். 

accident

விபத்து: 

அப்போது, சாலையின் ஓரத்தில் கியாஸ் டேங்கர் லாரி நின்றது. இந்த லாரியின் பின்பக்கம் கார் பயங்கரமாக மோதி ஏற்பட்ட விபத்தில், விஜய், தேன்மொழி மற்றும் குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொடூரமாக கொலை.. ஓடஓட விரட்டி சம்பவம்.. மதுரையில் பரபரப்பு.!