புதுக்கோட்டையில் சாராயம் குடித்த நண்பர்கள்.! ஒருவருக்கு கொரோனா பாதிப்பு.! 2 பேர் அடுத்தடுத்து மரணம்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

புதுக்கோட்டையில் சாராயம் குடித்த நண்பர்கள்.! ஒருவருக்கு கொரோனா பாதிப்பு.! 2 பேர் அடுத்தடுத்து மரணம்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!



2 people died in village

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான் ஊரணி கிராமத்தை சேர்ந்த துரைராஜ், அழகிரிசாமி, சுந்தரம் ஆகிய 3 பேரும், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாராயம் வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து மூன்று பேருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு துரைராஜ் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரைராஜ் உயிரிழந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அழகிரிசாமி உறவினர்கள், அழகிரிசாமியை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அழகிரிசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுந்தரம் குடும்பத்தினர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் சுந்தரத்திற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவரது நண்பர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில், தொண்டைமான் ஊரணி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) தொண்டைமான் ஊரணியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த உள்ளனர்.