ஓட்டலில் நடந்த திடீர் சோதனை.. அந்த கோலத்தில் மீட்கப்பட்ட 2 நடிகைகள்.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஷாக் செயல்.. திரைத்துறையில் பரபரப்பு.!



2 Actresses Rescued in Hotel Sex Racket Raid; Makeup Artist Arrested

பாலியல் தொழிலை ஈடுபட்ட பெண்களை மீட்ட காவல் துறையினர், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக வழக்கறிஞர், மேக்கப் ஆர்ட்டிஸ்டை கைது செய்துள்ளனர்.

பாலியல் தொழில்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், கல்யாண் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதியில், பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்த விஷயம் சில நாட்களுக்கு முன்னதாக கண்டறியப்பட்ட நிலையில், இதுகுறித்த ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: வாட்சப்பில் போட்டோ அனுப்பி ஹைடெக் விபசாரம்.. சென்னையில் வடமாநில புரோக்கர் கும்பல் கைது.!

வழக்கறிஞர் கைது:

இதன்பேரில் காவல்துறையினர் வாடிக்கையாளர்களை போல மாறுவேடத்தில் சென்று சோதனை செய்தனர். அப்போது, 3 மாதங்களாக சம்பந்தப்பட்ட இடத்தில் பாலியல் தொழில் நடந்து வருவது உறுதியானது. இதனையடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

இந்த வகை பெண்கள் டார்கெட்:

இவர் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெண்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Crime news

நடிகை மீட்பு:

இதேபோல, மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதியில் நடந்த பாலியல் தொழிலில் மகாராஷ்டிரா திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகை மற்றும் பெங்காலி படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகை என 2 பேர் மீட்கப்பட்டனர்.

ஒப்பனை கலைஞர் கைது:

இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுவதியதாக மேக்கப் கலைஞரான புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க: "சாமியாரும், 6 லேடி கேடிகளும்" கரண்டு ஷாக் கொடுத்து பெண் பலாத்காரம்.. 15 ஆண்டுகளாக திடுக் சம்பவம்.!