நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தால், சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்!

நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தால், சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்!



yesterday Match abandoned


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 10 போட்டிகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி தலா நான்கு புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நேற்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டம் ரத்தானது. இந்த போட்டியை காண  ஏராளமாக ரசிகர்கள் உலக நாடுகளில் இருந்து வந்து பிரிஸ்டல் மைதானத்தில் குவிந்தனர். ஆனால் நேற்றைய ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் நீண்டநேரமாக ஆட்டம் தொடருமா இல்லை ரத்து செய்யப்படுமா என ரசிகர்கள் சந்தேகத்தில் இருந்தனர்.

worldcup 2019

ஆனால் நேற்று பிரிஸ்டல் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணியினருக்கும் தல ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தானவுடன் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.