என்ன நடுவர் பணி, 'நான் அவுட்டே இல்லை' ஆதாரத்தை வெளியிட்ட டான் ரோஹித்.!
என்ன நடுவர் பணி, 'நான் அவுட்டே இல்லை' ஆதாரத்தை வெளியிட்ட டான் ரோஹித்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக KL ராகுல் மற்றும் ரோகித் சர்மா இறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் சர்மா 18 ரன் எடுத்திருந்த நிலையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
On field umpires make mistakes, understandable. But how can 3rd Umpires make such mistakes. Why doesn't ICC fine umpires for poor decisions? 🤬😒😏 #RohitSharma #INDvWI #INDvsWI pic.twitter.com/zZWHv7ZnJj
— Sir Jadeja fan (@SirJadeja) June 27, 2019
முதலில் நடுவர்களிடம் முறையிட்டபோது நடுவர்கள் விக்கெட் கொடுக்கவில்லை, பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி ரிவியூ மூலம் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்தானது ஒரே நேரத்தில் பேட் மாற்று காலில் பட்டது.
இதனால் பந்து பேட்டில் பட்டதா இல்லை பேடில் பட்டதா என தெரியவில்லை. குழப்பான நிலையில் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இது மிகவும் தவறான முடிவு என்றும், ரோகித்சர்மா அவுட் இல்லை என்றும் இந்திய அணி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
🤦♂️👀 pic.twitter.com/0RH6VeU6YB
— Rohit Sharma (@ImRo45) June 28, 2019
இதனிடையே ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் என்ன நடுவர் பணி செய்கிறார்கள் தான் அவுட் இல்லை என்பதற்கான தெளிவாக ஆதாரத்தை போட்டோவாக வெளியிட்டுள்ளார்.