டெஸ்ட் தொடரை இழந்ததால் ஏற்படும் விமர்சனங்கள்!. ரவி சாஸ்திரி- கவாஸ்கர்-க்கு இடையே மோதல்!.

டெஸ்ட் தொடரை இழந்ததால் ஏற்படும் விமர்சனங்கள்!. ரவி சாஸ்திரி- கவாஸ்கர்-க்கு இடையே மோதல்!.



senior-player-comparing-indian-team-players


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், விராட் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் விமர்சனங்கள் எழத்தொடங்கியது.

விமர்சனங்களை தொடர்ந்து ரவி சாஸ்திரி கூறுகையில்,  நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும், இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3 தொடர்களை வென்றுள்ளோம்.

பழைய அணியை விட தற்போது உள்ள இந்த அணி தான் சிறந்த அணி. முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் இதுபோன்ற ஓட்டங்களை அடித்தது இல்லை என கூறியிருந்தார்.

rahul dravit

இந்நிலையில், இதனையடுத்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் 1993ஆம் ஆண்டுக்கு பிறகு,  2015ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை. மேலும்  80-களில் இந்திய அணி, இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007ஆம் ஆண்டு, ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது.

அதே டிராவிட் தலைமையில் 2005ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

rahul dravit

அந்த போட்டிகளில் ராகுல் டிராவிட் தலைமையிலானா அதிரடி வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.