கிரிக்கெட்டில் சூதாட்டம்! ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிரபல வீரர் பணம் வாங்கியது அம்பலம்!

கிரிக்கெட்டில் சூதாட்டம்! ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிரபல வீரர் பணம் வாங்கியது அம்பலம்!



player arrest for match fixing


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் கர்நாடகாவிலும் நடந்து வருகிறது. அங்கு நடந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில வீரர்கள் மீது புகார் எழுந்தது.

இந்தநிலையில் இதுதொடர்பாக விசாரித்து வந்த போலீசார் ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய கிரிக்கெட் வீரர்களை நேற்று காலை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ஜி.எம்.கவுதம், பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக உள்ளார். அப்ரார் விக்கெட் கீப்பராக உள்ளார்.

ipl

கர்நாடக பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் பெல்லாரி மற்றும் ஹுப்பாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்வதற்காக 20 லட்சம் ரூபாயை இவர்கள் பெற்றதாகவும் மற்றொரு போட்டியின் முடிவை முன்பே தீர்மானிக்க பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜி.எம்.கவுதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, பெங்களுர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.