இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது! என்ன காரணம்?
இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது! என்ன காரணம்?
இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் காரில் சென்ற போது கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் நடந்து சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது காரை மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
இதனால் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததும் குசால் மெண்டிஸ் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
JUST IN from 🇱🇰 - Kusal Mendis has been arrested after he ran over a 64-year-old man with his SUV in Horethuduwa.
— Cricbuzz (@cricbuzz) July 5, 2020
Developing Story 👇https://t.co/oTmo6mZ1DP
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ். 25 வயதாகும் இவர் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.