பிராவோ அசத்தல் பந்துவீச்சு; தொடரும் தல தோனியின் வெற்றி; மகிழ்ச்சியில் திளைத்த சிஎஸ்கே ரசிகர்கள்.!



ipl 2019 - 12th leek - csk vs rr - chennai win

ஐபிஎல் 12ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 12 வது லீக் போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய சென்னை வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதில் ரெய்னா மட்டும் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சற்று ஆதரவளித்தார். ஒரு கட்டத்தில் கேப்டன் தோனி மற்றும் பிராவோ நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடத் துவங்கிய பிராவோவும் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் கடைசி ஓவரை வீசிய உனட்கட் ஓவரில் சென்னை அணி சிக்சர் மழை பொழிந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சர் அடித்து ஒரு ரன் அடித்தார். தொடர்ந்து அந்தப் ஓவரை சந்தித்த தல தோனி தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

46 பந்துகளை சந்தித்த தோனி 75 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். முடிவில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க மட்டையாளர் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவுட்டாகினார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது ஒரு கட்டத்தில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். இதனால் சென்னை அணியின் வெற்றி பறிபோகும் நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரில் 6 பந்துக்கு 12 ரன்கள் என்ற பரபரப்பான இலையில் சிஎஸ்கே வீரர் பிராவோவை பந்துவீச கேப்டன் டோனி அழைத்தார். தனது அனுபவ பந்துவீச்சின் மூலம் முதல் பந்திலேயே ஸ்டோக்ஸை வீழ்த்தினார். அதன் பிறகு மேலும் ஒரு விக்கெட்டை அந்த ஓவரில் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.