#Breaking: 189 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி.. பந்துவீச்சில் பதறவைத்த இந்திய அணி.. நேரில் பார்த்த சூப்பர்ஸ்டார்.!

#Breaking: 189 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி.. பந்துவீச்சில் பதறவைத்த இந்திய அணி.. நேரில் பார்த்த சூப்பர்ஸ்டார்.!



Australia out 189 runs india bowling

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல பரிட்சை செய்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது மூன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் - ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகிறது. 

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் முதல்நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் தனது ஒட்டு மொத்த விக்கெட் இழந்து 188 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகி வெளியேறியது. 

cricket

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் விளையாடிய மிச்சல் 65 பந்துகளில் 81 ரன்னும், ஸ்மித் 30 பந்துகளில் 22 ரன்களும், ஜோஷ் 27 பந்துகளில் 26 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து ஆட்டமிழந்தனர். 

இந்திய அணியின் சார்பில் பந்து வீசிய முகமது சிராஜ், முகமது சமி ஆகியோர் அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை சுருட்டினர். இன்றைய போட்டியை தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டது